மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி |
மஹாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள பன்வேல் பகுதியில், பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு அருகே கேத்தன் கக்கட் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. சமீபத்தில் இவர் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டி, தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சல்மான் கான் பண்ணை வீட்டில் குழந்தை கடத்தல் நடப்பதாகவும், அங்கு திரையுலக பிரபலங்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதாகவும் அவர் கூறியது, தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதில், சல்மான் கானின் மதம் குறித்தும் அவர் அவதுாறாக பேசி உள்ளார்.
இந்நிலையில் கேத்தன் கக்கட்டிற்கு எதிராக சல்மான் கான் அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நேற்று மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சல்மான் கானின் வழக்கறிஞர் பிரதீப் காந்தி ஆஜரானார்.அப்போது, நீதிபதியிடம் அவர் கூறியதாவது: எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் சல்மான் கான் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. அவர் மதம் குறித்து அவதுாறாக பேசி உள்ள கேத்தன் கக்கட்டிற்கு, இனி இதுபோன்ற கருத்துகளை வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். எனினும், அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், இதுகுறித்து பதிலளிக்க கேத்தன் கக்கட்டிற்கு உத்தரவிட்டது.