துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னணி நடிகர் திலீப், அவரது கார் டிரைவர் பல்சர் சுனில் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். 84 நாட்கள் சிறையில் இருந்து விட்டு ஜாமினில் வெளியில் வந்தார் திலீப்.
தற்போது கடத்தல் வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்டதாக திலீப் மற்றும் அவரது உறவினர்கள் மீது புதிய வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் திலிப் தற்போதைக்கு முன்ஜாமின் பெற்றுள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை சமீபத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் "இது எளிதான பயணம் அல்ல என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஐந்து ஆண்டுகளாக, என் பெயரும் எனது அடையாளமும் எனக்கு இழைக்கப்பட்ட கொடூரத் தாக்குதலின் பாரத்தால் அடக்கப்பட்டுள்ளது.
இப்போது எனக்காகப் பல குரல்கள் பேசுவதைக் கேட்கும்போது, நீதிக்கான இந்தப் போராட்டத்தில் நான் தனியாக இல்லை என்பது எனக்குத் தெரிகிறது. நீதி நிலைபெறவும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவும், இனி யாரும் இதுபோன்ற சோதனைக்கு ஆளாகாமல் இருக்கவும், இந்தப் பயணத்தை உறுதியுடனும் உயிர்ப்புடனும் தொடர்வேன். என்னுடன் நிற்கும் அனைவருக்கும், உங்கள் அன்புக்கும் மனமார்ந்த நன்றிகள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிக்கை அனைவரையும் நெகிழச் செய்தது. திலீப் விவகாரத்தில் மலையாள நடிகர் சங்கம் மறைமுகமாக திலீபின் பக்கமே நின்றது. மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இதுகுறித்து மவுனம் காத்து வந்தனர். நடிகைகள் பார்வதி, மஞ்சு வாரியார் உள்ளிட்ட சிலரே பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக நின்றனர்.
திலீபின் மீது புதிய வழக்கு, பாதிக்கப்பட்ட நடிகையின் கண்ணீர் அறிக்கை இதற்க பிறகு எல்லோருமே பாதிக்கப்பட்ட நடிகையின் பக்கம் நிற்கிறார்கள். குறிப்பாக மம்முட்டி, அந்த நடிகையின் அறிக்கையை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு "நான் உங்களுடன் இருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார். இதேபோன்று மோகன்லாலும் அறிக்கையை பகிர்ந்து "மரியாதை" என்று பதிவிட்டுள்ளார். இதேபோல பிருத்விராஜ் உள்ளிட்ட மலையாள முன்னணி நடிகர், நடிகைகளும் தங்கள் ஆதரவை கடத்தப்பட்ட நடிகைக்கு தெரிவித்திருக்கிறார்கள்.