Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கடத்தப்பட்ட நடிகைக்கு மம்முட்டி, மோகன்லால் திடீர் ஆதரவு

13 ஜன, 2022 - 15:14 IST
எழுத்தின் அளவு:
Mammootty,-Mohanlal-support-the-abducted-actress

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னணி நடிகர் திலீப், அவரது கார் டிரைவர் பல்சர் சுனில் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். 84 நாட்கள் சிறையில் இருந்து விட்டு ஜாமினில் வெளியில் வந்தார் திலீப்.

தற்போது கடத்தல் வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்டதாக திலீப் மற்றும் அவரது உறவினர்கள் மீது புதிய வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் திலிப் தற்போதைக்கு முன்ஜாமின் பெற்றுள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை சமீபத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் "இது எளிதான பயணம் அல்ல என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஐந்து ஆண்டுகளாக, என் பெயரும் எனது அடையாளமும் எனக்கு இழைக்கப்பட்ட கொடூரத் தாக்குதலின் பாரத்தால் அடக்கப்பட்டுள்ளது.

இப்போது எனக்காகப் பல குரல்கள் பேசுவதைக் கேட்கும்போது, ​​நீதிக்கான இந்தப் போராட்டத்தில் நான் தனியாக இல்லை என்பது எனக்குத் தெரிகிறது. நீதி நிலைபெறவும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவும், இனி யாரும் இதுபோன்ற சோதனைக்கு ஆளாகாமல் இருக்கவும், இந்தப் பயணத்தை உறுதியுடனும் உயிர்ப்புடனும் தொடர்வேன். என்னுடன் நிற்கும் அனைவருக்கும், உங்கள் அன்புக்கும் மனமார்ந்த நன்றிகள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிக்கை அனைவரையும் நெகிழச் செய்தது. திலீப் விவகாரத்தில் மலையாள நடிகர் சங்கம் மறைமுகமாக திலீபின் பக்கமே நின்றது. மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இதுகுறித்து மவுனம் காத்து வந்தனர். நடிகைகள் பார்வதி, மஞ்சு வாரியார் உள்ளிட்ட சிலரே பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக நின்றனர்.

திலீபின் மீது புதிய வழக்கு, பாதிக்கப்பட்ட நடிகையின் கண்ணீர் அறிக்கை இதற்க பிறகு எல்லோருமே பாதிக்கப்பட்ட நடிகையின் பக்கம் நிற்கிறார்கள். குறிப்பாக மம்முட்டி, அந்த நடிகையின் அறிக்கையை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு "நான் உங்களுடன் இருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார். இதேபோன்று மோகன்லாலும் அறிக்கையை பகிர்ந்து "மரியாதை" என்று பதிவிட்டுள்ளார். இதேபோல பிருத்விராஜ் உள்ளிட்ட மலையாள முன்னணி நடிகர், நடிகைகளும் தங்கள் ஆதரவை கடத்தப்பட்ட நடிகைக்கு தெரிவித்திருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் ஜல்லிக்கட்டு இயக்குனரின் படத்தில் நடிக்கும் மம்முட்டிமீண்டும் ஜல்லிக்கட்டு இயக்குனரின் ... திலீப் வீட்டில் சுவரேறி குதித்த போலீஸ் திலீப் வீட்டில் சுவரேறி குதித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

BalaG -  ( Posted via: Dinamalar Android App )
14 ஜன, 2022 - 01:21 Report Abuse
BalaG இவ்வளவு நாளா ஏன் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை? அவ்வளவு பெரிய நடிகர்களாக இருந்து கொண்டு சில பெண்களுக்கு இருக்கும் தைரியம் கூட ஏன் இவர்களுக்கு இல்லை? அப்புறம் என்ன இவர்கள் எல்லாம் பெரிய நடிகர்கள்? இவர்கள் நினைத்தால் எப்போவோ இந்த கேஸை முடித்திருக்கலாம். அந்த கேடு கெட்டவனுக்கு எதற்கு ஆதரவு தராங்கன்னு தெரியல..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in