சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கும் விஜய் அறிமுகமான படம் நாளைய தீர்ப்பு. இது எல்லோரும் எளிதில் சொல்லி விடுவார்கள். இதே படத்தில் நாயகியாக அறிமுகமானவர் கீர்த்தனா. விஜய்யுடன் இணைந்ததை அடுத்து அஜித்துடன் பவித்ரா பட த்தில் இணைந்து நடித்தார்.
பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்தவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, நாளைய தீர்ப்பு படத்தில் விஜய்யுடன் நடிக்க 31 பேர் ஆடிஷனுக்கு வந்து தேர்வாகவில்லை. 32 வது ஆளாக போன நான் தேர்வானேன். மறுபடியும் விஜய், அஜித்துக்கு பிளாஷ்பேக் ஹீரோயினா நடிக்க வாய்ப்பு கிடைச்சா நிச்சயம் பண்ணுவேன். திரைப்படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கணும்னு காத்திருக்கிறேன். நல்ல கதைக்களம் அமைஞ்சா நிச்சயம் சினிமாவிலும் ரீ-என்ட்ரி தான்'. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.