ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கொடிய வைரசான கொரோனா மீண்டும் திரைப்பட நட்சத்திரங்களை தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அர்ஜுன் கபூர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலிவுட் நடிகை முர்னல் தாகூர் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை லேசான அறிகுறியுடன் தொற்று உறுதியாகியுள்ளது. நான் நலமுடன் உள்ளேன். மேலும், நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். டாக்டர்கள் தெரிவித்த அறிவுறுத்தல்களை கடைபிடித்து வருகின்றனர். என்னுடன் தொடர்பில் இருந்த நபர்கள் விரைவில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அனைவரும் கவனமாக இருங்கள். என கூறியுள்ளார்.
முர்னல் தாகூர் மராட்டிய மொழி படங்களில் இருந்து லவ் சோனியா படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு வந்தவர். அதன் பிறகு சூப்பர் 30, பேட்ல் ஹவுஸ், கோஸ்ட் ஸ்டோரி, டோபோன், டமாக்கா படங்களில் நடித்தார். தற்போது ஜெர்சி, பிப்பா, கும்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.