600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
மலையாள திரையுலகின் பழம்பெரும் மூத்த நடிகரான ஜிகே பிள்ளை இன்று(டிச., 31) காலமானார் அவருக்கு வயது 97. கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் இவரது மனைவியும் காலமானார். இவருக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். சினிமாவில் நுழைவதற்கு முன் ராணுவத்திலும் கப்பற்படையிலும் இவர் பணிபுரிந்துள்ளார்.
மலையாளத்தில் 1957ல் சிநேகசீமா என்கிற படத்தில் நடிகராக அறிமுகமான இவர் இதுவரை சுமார் 325 படங்களில் நடித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மலையாளத்தில் நடித்த தச்சோளி அம்பு என்கிற படத்தில் அவருடன் இணைந்து நடித்தவர் ஜிகே பிள்ளை.
பெரும்பாலும் வில்லன் வேடங்களில் நடித்து பெயர் பெற்ற ஜிகே பிள்ளை தொலைக்காட்சியில் கடமட்டத்து கத்தனார் என்கிற தொடரில் கர்னல் ஜெகநாத வர்மா கதாபாத்திரத்தில் நடித்து ஒவ்வொரு வீட்டுக்கும் ரொம்பவே நெருக்கமான ஒருவராக மாறினார்.