ராம்கோபால் வர்மா மீது பணமோசடி புகார் | கேஜிஎப் படத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | மோகன்லால் மீதான யானை தந்தம் வழக்கு: 3 வாரத்தில் விசாரணையை முடிக்க கோர்ட் உத்தரவு | ஆட்டோவில் சென்ற நடிகையிடம் அத்துமீறிய போலீஸ் | ராம் படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் மோகன்லால் - ஜீத்து ஜோசப் | சேகர் படத்தின் தடை நீக்கம் ; மறு ரிலீஸ் தேதி பரிசீலனை | ரிட்டர்ன் டிக்கெட்டை காட்டினால் மட்டுமே ஜாமீன் ; நடிகருக்கு நீதிமன்றம் செக் | விசாரணை தடம் மாறுகிறது : பாதிக்கப்பட்ட நடிகை நீதிமன்றத்தில் மனு | 2022ல் ஹாட்ரிக் வெளியீட்டில் கார்த்தி | போர்கொண்ட சிங்கம் : 'விக்ரம்'-ன் அடுத்த பாடல் வெளியீடு |
ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள பிரபல அமீன் பீர் பெரிய தர்காவில் சந்தனக்கூடு உரூஸ் திருவிழா நடந்து வருகிறது. இதில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திரண்டு வந்து பிரார்த்தனை செய்து வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக குறைந்த அளவிலான பக்தர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மட்டும் சந்தனகூடு விழாவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று அதிகாலை அமீன் பீர் பெரிய தர்காவுக்கு சந்தனக்கூடு கொண்டு வந்து, தர்காவில் வைத்து சிறப்பு தொழுகை நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாகி அரிபுலா ஹுசைன் செய்திருந்தார். ரகுமான் வருகிற தகவலை தர்கா நிர்வாகிகள் ரகசியமாக வைத்திருந்தார்கள். அவர் சதாரண பக்தர் போன்று வந்து பிரார்த்தனை செய்து விட்டு திரும்பினார். கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் ரகுமான் இந்த தர்காவுக்கு வந்துள்ளார்.