ராம்கோபால் வர்மா மீது பணமோசடி புகார் | கேஜிஎப் படத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | மோகன்லால் மீதான யானை தந்தம் வழக்கு: 3 வாரத்தில் விசாரணையை முடிக்க கோர்ட் உத்தரவு | ஆட்டோவில் சென்ற நடிகையிடம் அத்துமீறிய போலீஸ் | ராம் படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் மோகன்லால் - ஜீத்து ஜோசப் | சேகர் படத்தின் தடை நீக்கம் ; மறு ரிலீஸ் தேதி பரிசீலனை | ரிட்டர்ன் டிக்கெட்டை காட்டினால் மட்டுமே ஜாமீன் ; நடிகருக்கு நீதிமன்றம் செக் | விசாரணை தடம் மாறுகிறது : பாதிக்கப்பட்ட நடிகை நீதிமன்றத்தில் மனு | 2022ல் ஹாட்ரிக் வெளியீட்டில் கார்த்தி | போர்கொண்ட சிங்கம் : 'விக்ரம்'-ன் அடுத்த பாடல் வெளியீடு |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் ஐந்து மொழிகளில் வெளியான படம் 'புஷ்பா'. இப்படத்தில் 'ஓ சொல்றியா மாமா…' என்ற ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனமாடியுள்ளார் சமந்தா. அப்பாடல் அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது.
படத்தைப் பார்த்து சமந்தா கூறுகையில், “இது அல்லு அர்ஜுனைப் பாராட்டும் ஒரு பதிவு. ஒவ்வொரு நொடியும் உங்களை கவர்ந்திழுக்கும் ஒரு நடிப்பு. ஒரு நடிகர் எப்போதும் சிறப்பாக செயல்படும் போது அவரை விட்டு விலகிப் பார்ப்பது முடியாத ஒன்று. 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன் எனக்கு அப்படித்தான் தெரிகிறார். பேச்சு நடை, தோளை இறக்கி நடக்கும் நடை… அச்சோ... நிஜமாகவே பிரமிப்பு, மிவும் உத்வேகமான ஒன்று,” எனப் பாராட்டியுள்ளார்.
சமந்தாவின் பாராட்டிற்கு, “மனப்பூர்வமான பாராட்டுக்களுக்கு நன்றி டியர், தொட்டுவிட்டீர்கள்,” என அல்லு அர்ஜுன் நன்றி தெரிவித்துள்ளார்.