தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கில் சீனியர் நடிகர்களில், இன்றும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக அதிரடி ஹீரோவாகவே நடித்து வருபவர் நடிகர் பாலகிருஷ்ணா. சமீபத்தில் இவர் நடித்த அகண்டா திரைப்படம் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் தனியாக துவங்கியுள்ள ஆஹா என்கிற ஒடிடி தளத்தில் 'அன்ஸ்டாப்பபில் வித் என்பிகே' என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார் பாலகிருஷ்ணா.
சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோடுகளில் நடிகர்கள் நானி மற்றும் மோகன்பாபு ஆகியோர் கலந்து நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தினார்கள். இந்தநிலையில் தற்போது நடிகர் மகேஷ்பாபு மற்றும் இயக்குனர் அனில் ரவிபுடி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இந்த மாலை பொழுதை ரொம்பவே ரசித்து அனுபவித்தேன் என மகேஷ்பாபு கூறியுள்ளார். வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்பொது இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறதாம். இந்த நிகழ்ச்சி மூலம் மகேஷ்பாபு பற்றி இன்னும் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.