தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கலர்ஸ் தமிழில் ரேஷ்மா, மதன் பாண்டியன் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் தொடர் அபி டெய்லர்ஸ். சின்னத்திரை ரசிகர்களிடையே தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் 100-வது எபிசோடை கொண்டாடிய சீரியல் குழுவினர் இனி வரும் எபிசோடுகளில் பல சர்ப்ரைஸ்களை வைத்திருப்பதாக தெரிவித்ததோடு அதை திரைக்கதையில் செயல்படுத்தியும் வருகிறது.
இந்நிலையில் கடத்தல், வில்லன்கள் என கமர்ஷியலாக சென்று கொண்டிருக்கும் எபிசோடில் ஹீரோவை காப்பாற்ற பிரபல ஹீரோ ஜெய் ஆகாஷ் போலீஸாக என்ட்ரி ஆகியுள்ளார். இதுகுறித்து ஜெய் ஆகாஷ் கூறுகையில், 'நான் புதிய ப்ராஜெக்டில் போலீஸ் ஆபிசராக நடிக்க உள்ளேன். இது குறித்த விபரங்களை விரைவில் தெரிவிக்கிறேன்' என்றார்.
ஜெய் ஆகாஷ் ஏற்கனவே ஜீ தமிழ் தொலைக்காட்சி நீதானே என் பொன் வசந்தம் தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது அவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.