தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரினா கைப், நடிகரான விக்கி கவுசல் இருவரும் வரும் டிசம்பர் 9ம் தேதி ராஜஸ்தானில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள். தனியார் ரிசார்ட் ஒன்றில் அவர்களது திருமணம் மூன்று நாள் கொண்டாட்டமாக நடைபெற உள்ளது. இவர்களது திருமணத்திற்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளார்களாம்.
ஆனால், திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்களாம். திருமணம் நடைபெற உள் இடத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் பிறகு மொபைல் போன்களை எடுத்து வர அனுமதி இல்லையாம்.
மேலும், திருமண நிகழ்வுகள் பற்றி கலந்து கொள்பவர்கள் எந்த ஒரு பதிவையும் சமூக வலைத்தளங்களில் கத்ரினா, விக்கி ஆகியோரின் முன் அனுமதி இல்லாமல் பதிவிடக் கூடாதாம். ஏன் இவ்வளவு கட்டுப்பாடுகள் என பாலிவுட் வட்டாரத்தில் இது பற்றித்தான் தற்போது பேசிக் கொள்கிறார்களாம்.