டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அன்பே வா சீரியல் முடியப்போகிறது என கடந்த சில தினங்களாக செய்தி பரவி வந்த நிலையில் அது உண்மை இல்லை என அதில் நடித்து வரும் நடிகை விளக்கம் கொடுத்துள்ளார்.
முன்னணி டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று அன்பே வா. பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரின் முக்கிய வில்லி கதாபாத்திரமான பூமிகாவின் மாமியார் திருந்திவிடுகிறார். மேலும், வருணுக்கும் பூமிகாவிக்கும் இடையே நீண்ட நாட்களாக மறைந்திருந்த உண்மையும் வெளிவந்து விடுகிறது. 300 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ள அன்பே வா தொடரில் இரண்டு முக்கியமான பிரச்னைகள் அடுத்தடுத்து சரியானது போல் காட்சிபடுத்தபட்டுள்ளது. எனவே அன்பே வா சீரியல் தொடர்ந்து எப்படி நகரப் போகிறது என்ற கேள்வியுடன் பலரும் இந்த சீரியல் முடிந்து விடும் என பேசி வந்தனர்.
இந்நிலையில் இந்த தொடரில் நடித்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவரான ஹேமதயாள் அன்பே வா சீரியல் முடியவில்லை. பல திருப்பங்களுடன் மீண்டும் ஜொலிக்க போகிறது என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.