Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

1947ல் என்ன போர் நடந்தது?; கங்கனா கேள்வி

14 நவ, 2021 - 11:10 IST
எழுத்தின் அளவு:
kangana-questioned-about-freedom

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது வழக்கம். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் நாட்டுக்கு 2014ல் தான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது; 1947ல் பெற்றது பிச்சை என்றார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.


ஜான்சி ராணி லட்சுமி பாய் பற்றிய திரைப்படமான, மணிகர்னிகாவில் லட்சுமி பாயாக நடித்தேன். அப்போது 1857ல் நடந்த முதல் இந்திய சுதந்திர போர் பற்றி விரிவாக படித்தேன். ஆங்கிலேயர்களுக்கு எதிராக ராணி லட்சுமி பாய் உட்பட பலர் அந்த போரில் உயிர் தியாகம் செய்துள்ளனர். அவர்களை தொடர்ந்து பால கங்காதர திலகர், பகத் சிங், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், வீர சாவர்க்கர் உட்பட பலரும் தியாகங்களை செய்து உள்ளனர்.மஹாத்மா காந்தி நினைத்திருந்தால் பகத் சிங்கை காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் காப்பாற்றவில்லை.


நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்துக்கு மஹாத்மா காந்தி ஆதரவு தெரிவிக்கவில்லை. அவர் ஆதரவு தெரிவித்திருந்தால் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று நேதாஜி பிரதமராகியிருப்பார். நம் நாட்டை ஆங்கிலேயர்கள் முழுமையாக கொள்ளையடித்துவிட்டு, மஹாத்மா காந்தி ஏந்திய பாத்திரத்தில் சுதந்திரம் என்ற பெயரில் பிச்சை தான் போட்டனர்.


எனக்கு தெரிந்தவரை 1947ல் எந்த போரும் நடக்கவில்லை. நடந்திருந்தால் அது பற்றி யாராவது சொல்லட்டும்.தேசத்தை வெள்ளையர்கள் ஏன் பிரித்தனர். 1947ல் சுதந்திரத்தை கொண்டாடுவதற்கு பதில், மக்கள் ஒருவருடன் ஒருவர் அடித்துக் கொண்டது ஏன்? இதற்கான பதில்களை யாராவது சொல்லட்டும். அதன்பின் 1947ல் பெற்ற சுதந்திரத்தை பிச்சை என கூறியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு, எனக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதையும் திருப்பி கொடுத்து விடுவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


சிவசேனாவின் பத்திரிகையான சாம்னாவில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுஉள்ளதாவது: ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் தியாகத்தால் தான் 1947ல் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால் இதை பிச்சை என கூறி, நாட்டையே கங்கனா அவமானப்படுத்தியுள்ளார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பத்மஸ்ரீ விருதை, கங்கனா ரணாவத்துக்கு வழங்கி, மத்திய பா.ஜ., அரசு, சுதந்திர தியாகிகளை அவமானப்படுத்தியுள்ளது. பா.ஜ.,வின் போலி தேசியம் வெளிப்பட்டுவிட்டது. கங்கனாவுக்கு வழங்கப்பட்ட அனைத்து தேசிய விருதுகளையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
நட்சத்திர வாரிசுகள் மூவர் ஒரே படத்தில் அறிமுகம்நட்சத்திர வாரிசுகள் மூவர் ஒரே ... ஆர்யன்கானின் பிறந்தநாளில் 500 மரக்கன்றுகளை நட்ட ஜூகி சாவ்லா! ஆர்யன்கானின் பிறந்தநாளில் 500 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

chakra - plano,யூ.எஸ்.ஏ
16 நவ, 2021 - 00:16 Report Abuse
chakra படிக்காத கூத்தாடியிடம் வேறு என்ன பதில் கிடைக்கும்
Rate this:
Srsrs -  ( Posted via: Dinamalar Android App )
15 நவ, 2021 - 22:12 Report Abuse
Srsrs இதுக்கு கூட சங்கிகள் வருவார்கள்
Rate this:
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
15 நவ, 2021 - 12:10 Report Abuse
மனிதன் தேசத்தைப்பற்றியம் அதில் உயிர் நீத்தவர்களின் தியாகத்தைப்பற்றியும் இவளுக்கு என்ன தெரியும்... உன் தேவைகள் நடக்கவேண்டுமென்றால் நீ பாஜகவில் போய் இணைந்துகொள்., அதற்காக அவர்களை குளிர்விக்க போராட்ட வீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தவேண்டாம்...
Rate this:
BALAMURUGAN.E - CHENNAI,இந்தியா
15 நவ, 2021 - 12:01 Report Abuse
BALAMURUGAN.E உண்மைதான். 1947-ல் போர் எதுவும் இல்லாமல் கிடைத்த சுதந்திரம். மதத்தின் பேரில் நாட்டை பிரித்து - அதுவும் முழுமையாக இல்லாதது மிகப்பெரிய தோல்வி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in