பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
ஜி தமிழின் செம்பருத்தி தொடர் தமிழ் சின்னத்திரையில் டாப் ஹிட் சீரியலாக பல நாட்கள் வலம் வந்தது. செம்பருத்தி தொடரின் ஆதி-பார்வதி இடையேயான காதல் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு பல காதல் ஸ்டேட்டஸ்களுக்கு ஆதி-ஷபானா கெமிஸ்ட்ரி டெம்பிளேட் ஆக மாறியது. இது, தொடரின் டிஆர்பிக்கும் முக்கிய காரணமாக இருந்தது வந்தது. இந்நிலையில் கார்த்திக் ராஜ் செம்பருத்தி தொடரில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். இதனையடுத்து ஆதி கதாபாத்திரத்தை பிரபல விஜே அக்னி ஏற்று நடித்து வருகிறார். ஆனால், கார்த்திக் ராஜ் விலகிய நாள் முதல் செம்பருத்தி தொடர் சரிவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது.
கதைக்களத்தில் பல ட்விஸ்டுகளையும் வித்தியாசமான முயற்சிகளையும் சீரியல் குழுவினர் எடுத்து வந்தாலும் செம்பருத்தி தொடரால் பழைய இடத்தை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் தற்போது கதையின் சுவாரசியத்தை கூட்டும் வகையில் புதிதாக ஒரு அம்மன் எபிசோடை ஜி தமிழ் முயற்சி செய்யவுள்ளது. அதில், அகிலாண்டேஸ்வரிக்காக மிகவும் கஷ்டமான பரிகாரம் ஒன்றை பார்வதி செய்ய, பார்வதிக்கு உதவும் பொருட்டு ஒன்பது அம்மன்கள் வருவது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த ஒன்பது அம்மன்களாக தேவயாணி, நக்ஷத்திரா, ரக்ஷா ஹோலா, தர்ஷனா அசோகன், கீர்த்தனா பொதுவல் உள்ளிட்ட ஜி தமிழின் முன்னணி சீரியல்களில் கதாநாயகிகளாக நடித்து வரும் நடிகைகள் தோன்றவுள்ளனர். இதன் மூலம் மற்ற சீரியல்களின் ஆடியன்ஸ்களையும் செம்பருத்தி சீரியலை பார்க்க வைக்கும் யுக்தியை ஜி தமிழ் முயற்சி செய்யவுள்ளது. இது தொடர்பான ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி ஜி தமிழ் டிவி நேயர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சரிந்த தொடரை சக்சஸ் பாதைக்கு அழைத்து செல்ல இந்த ஒன்பது நாயகிகள் உதவுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.