ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சின்னத்திரையில் முன்னணி நாயகியாக வலம் வந்த ரச்சிதா சினிமாவில் என்ட்ரி கொடுத்ததையடுத்து சீரியலில் இருந்து முற்றிலுமாக விலகியுள்ளார்.
விஜய் டிவி சீரியல்களின் மூலம் நடிகையாக அறிமுகமான ரச்சிதா, தற்போது சின்னத்திரையில் பிரபலமான முகமாக இருந்து வருகிறார். சரவணன் மீனாட்சி தொடரின் அடுத்தடுத்த சீசன்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ரச்சிதா, தற்போது 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீசன் 2-விலும் கலக்கி வந்தார்.
இந்நிலையில் இவருக்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கன்னட படத்தின் மூலம் கிடைத்தது. இதனையடுத்து அவர் சீரியலை விட்டு விலகுகிறார் என்ற செய்திகள் சில மாதங்களுக்கு முன் பரவலாக வலம் வந்தன. ஆனால், அப்போது அதை மறுத்த ரச்சிதா, 'போற வரைக்கும் போவோம்! தானா ஸ்டாப் ஆன பாத்துக்கலாம். சீரியலை விட்டு போறேன் போறேன்னு சொல்லி சொல்லி நீங்களே போக வைச்சுடாதீங்க' என கிண்டலாக பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் விஜய் டிவிக்கு பை சொல்லிவிட்டு சினிமாவிற்குள் மொத்தமாக நுழைகிறார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ரச்சிதா 'நாம் இருவர் நமக்கு இருவர் 2'வின் மஹாலெட்சுமி கெட்டப்பில் போட்டோவை வெளியிட்டு கேப்ஷனாக 'பை மஹா' என பதிவிட்டுள்ளார். ரச்சிதா சின்னத்திரையை விட்டு முழுதாக விலகியுள்ள செய்தி சில ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.