ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹிந்தித் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனன்யா பான்டே. 'ஸ்டூடன்ட் ஆப் த இயர் 2' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதற்கடுத்து 'பதி பத்னி அவுர் ஓ, காலி பீலி' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தெலுங்கு, ஹிந்தியில் உருவாகி வரும் 'லிகர்' படம் மூலம் தென்னிந்தியத் திரையுலகிலும் அறிமுகமாக உள்ளார். சில நாட்களுக்கு முன்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மும்பையில் அனன்யா வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அதனால், செய்திகளில் பரபரப்பாக இடம் பெற்றார்.
இதனிடையே, வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள புதிய படத்தில் அனன்யாவை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார்கக்ளாம். ஆனால், போதைப் பொருள் சோதனையை அடுத்து அந்த எண்ணத்தை கைவிட்டதாக செய்திகள் வெளியாகின.
இது குறித்து அனன்யா பான்டே சமீபத்தி பேட்டி ஒன்றில், “என்னை முதலில் அந்தப் படத்திற்காக யாரும் தொடர்பு கொள்ளவே இல்லை. அப்புறம் என்னை எப்படி அந்தப் படத்திலிருந்து நீக்க முடியும்,” என கேள்வி எழுப்பியுள்ளார்.