ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் படம் புஷ்பா. இப்படத்தில் முதல் பாகம் டிசம்பர் 17-ந்தேதி புஷ்பா தி ரைஸ் என்ற பெயரில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி அப்படத்தின் மூன்று பாடல்கள் இன்னும் படமாக்கவில்லை என்பதால், திட்டமிட்டபடி புஷ்பா முதல் பாகம் டிசம்பர் 17ல் வெளியாக வாய்ப்பில்லை என்பது போன்று ஒரு செய்தி டோலிவுட்டில் பரவி வருகிறது. இதை மறுத்துள்ள படக்குழு, மூன்று பாடல்களும் நவம்பர் இரண்டாவது வாரத்திற்குள் படமாக்கி முடிக்கப்பட்டு விடும். அதனால் டிசம்பர் 17ல் படம் வெளியாவதில் எந்த சிக்கலும் ஏற்படாது என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.