தனது தனித்துவமான குரல், நேர்த்தியான பாடல்கள் மூலம் வெகுவான ரசிகர்களை பெற்றிருப்பவர் பாடகர் சித்ஸ்ரீராம். இவர் பாடிய ‛‛கண்ணான கண்ணே...’’ பாடல் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உருகவைத்தது. இவர் தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நேரடி இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.
உலகம் அமைதியாகவும், அன்பாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக "நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்" நிறுவனத்துடன் இணைந்து ‛ஆல் லவ் நோ ஹேட்’ என்ற தலைப்பில் நடக்கும் முதல் இசை நிகழ்ச்சி, 2020, பிப்.,8ம் தேதி சென்னை, ஒய்எம்சிஏ., மைதானத்தில் மாலை நடக்கிறது. சித்ஸ்ரீராமின் இன்னிசை மழையில் நனைய தினமலர் வாசர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. கீழ்க்கண்ட கேள்விக்கு சரியான பதில் அளியுங்கள்.
சரியான விடையுடன் உங்கள் பெயர், ஊர், முகவரி, மொபைல் நம்பர் மற்றும் இ-மெயில் ஆகியவற்றை கீழே உள்ள பாக்ஸில் பதிவு செய்யவும்.
போட்டி நிறைவுபெற்றது.