டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்துவரும் புஷ்பா என்கிற படம் சுகுமார் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் மிரட்டலான வில்லனாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் நடிக்கும் முதல் தெலுங்கு படமும் இதுதான். செம்மர கடத்தல் பின்னணியை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படம் கதையின் நீளம் கருதி இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது.
அந்த வகையில் முதல் பாகம் கிறிஸ்துமஸ் பண்டிகை ரிலீஸாக வெளியாக இருக்கிறது என அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் பஹத் பாசில் மற்றும் அல்லு அர்ஜுன் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகள் மட்டும் படமாக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதில் இருவருக்குமான மோதல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இந்த காட்சிகளை படமாக்கி முடித்தால் முதல் பாகத்திற்கான அனைத்து காட்சிகளும் முடிந்துவிடும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.