பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
வெளிநாட்டில் இருந்து இறக்குமதியான பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவின் எல்லா மொழிகளிலும் வெற்றி பெற்றது. மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியினை மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். இதன் 3வது சீசன் படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வந்த நிலையில் கொரோனா 2வது அலை காரணமாக 95வது நாளில் நிறுத்தப்பட்டது. இதனால் டைட்டில் வின்னரை பார்வையாளர்களின் ஓட்டெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இந்த நிலையில் மலையாள பிக் பாஸ் 4வது சீசனுக்கு பங்கேற்பாளர்கள் தேர்வு நடந்து வருவதாகவும், கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களை பற்றிய தகவல்களுடன் விண்ணப்பிக்கலாம் என்றும் இணைய தளங்களில் விண்ணப்ப படிவங்கள் வெளியானது.
இது மோசடியானது என்றும், உண்மை என்று நம்பி யாரும் தங்களுடைய விவரங்களை அனுப்பி ஏமாற வேண்டாம் என்றும் பிக்பாஸ் 4 சீசன் நிகழ்ச்சிக்கு போட்டியாளர்கள் தேர்வை இதுவரை நடத்தவில்லை என்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அறிவித்து உள்ளனர். அதோடு இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.