ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
தெலுங்கு திரையுலகில் கடந்த 45 வருடங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கி, முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் கே.ராகவேந்திர ராவ். கடந்த சில ஆண்டுகளாக, டைரக்ஷனில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகரான தணிகலபரணி இயக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார் ராகவேந்திரா ராவ்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மனைவி வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.. மேலும் சமந்தா மற்றும் ஸ்ரேயா ஆகியோர் கெஸ்ட் ரோல்களில் நடிக்க உள்ளார்கள். இதுதவிர, ராகவேந்திர ராவின் மகளாக இன்னொரு கதாநாயகியும் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அரசு ஊழியராக நடிக்கிறாராம் ராகவேந்திர ராவ். கில்லி படத்தில் பிரகாஷ்ராஜின் தந்தையாக நடித்த தணிகலபரணி தான் இந்தப்படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.