அஜித் - ஷாலினியின் ரொமான்ட்டிக் போட்டோ வைரல் | 'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார் | லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம் | தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நிவேதா பெத்துராஜ் | 'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை - தயாரிப்பாளர் டிவிவி தனய்யா | சிரஞ்சீவியின் சகோதரர் மகள், கணவருடன் கருத்து வேறுபாடு? | பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? - மஞ்சு வாரியர் | பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா | 130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | ஏழைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அறிவித்த பாலகிருஷ்ணா |
மலையாள சினிமாவில் 90களில் ஆக்சன் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் சுரேஷ் கோபி. மலையாள நடிகர்களில் அதிக படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர். கடந்த ஐந்து வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கி, அரசியல் கட்சியில் சேர்ந்து, கட்சிப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் மீண்டும் சினிமாவுக்கு திரும்பியிருக்கும் சுரேஷ்கோபி, தற்போது, 'காவல்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் இளைஞர், வயதானவர் என இரண்டு விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார் சுரேஷ்கோபி.
சுரேஷ் கோபியின் பல படங்களுக்கு, ஆஸ்தான கதாசிரியராக விளங்கிய ரெஞ்சி பணிக்கர் என்பவரின் மகனான நிதின் ரஞ்சித் பணிக்கர் தான், இந்த படத்தை இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே, மம்முட்டியை வைத்து, 'கசபா' என்கிற, சர்ச்சைக்குரிய போலீஸ் படத்தை இயக்கியவர். காவல் படம் குறித்து இயக்குனர் நிதின் கூறும்போது, “சுரேஷ்கோபி சமீபத்தில் சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும், இந்த காவல் படத்தில் 90களில் பார்த்த, அதே ஆக்சன் கிங் சுரேஷ்கோபியை மீண்டும் ரசிகர்கள் பார்க்கலாம்” என உறுதி அளித்துள்ளார்.