திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் | ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு |
பார் சேல் (விற்பனைக்கு) என்ற மலையாளப் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சோனா அபிரகாம். அந்த படத்தில் இடம்பெற்ற எடிட் செய்யப்படாத பலாத்கார காட்சி ஆபாச காட்சி இணையதளங்களில் வெளியானது. இதை நீக்க வேண்டும் என்று கேரள முதல்வர் மற்றும் காவல்துறையிடம் சோனா ஆபிரகாம் புகார் அளித்துள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த நடிகை சோனா ஆபிரகாம் தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரது பெற்றோர்கள் அவரை சரியான நேரத்தில் காப்பாற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து நடிகை ஷோனா ஆபிரகாம் தனது பேஸ்-புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய 14வது வயதில் 'பார் சேல்' என்ற மலையாள படத்தில் நடித்தேன். அதில் காதல் சந்தியா, ஐஸ்வர்யா உள்பட பலர் நடித்திருந்தனர். கதையின் படி படத்தில் எனது அக்காவாக காதல் சந்தியா நடித்திருந்தார். தங்கை பலாத்காரம் செய்யப்படுவதை பார்த்த அக்கா மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொள்கிறார்.
அறியாத வயதில் அந்த படத்தில் நடித்தேன். கதைப்படி பலாத்கார காட்சியில் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் என்னிடம் கூறினார். ஆனால் 150க்கும் மேற்பட்டோரின் முன்னிலையில் என்னால் அந்த காட்சியில் நடிக்க முடியாது என கூறினேன்.
இதையடுத்து கொச்சியில் உள்ள டைரக்டரின் அலுவலகத்தில் அந்த காட்சி எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு முடிந்த பின்னர், நான் படிக்க பள்ளிக்கு சென்று விட்டேன். இந்த நிலையில் நான் பிளஸ் 2 படித்தபோது அந்த பலாத்கார காட்சிகள் பல ஆபாச இணையதளங்களில் வெளியானது தெரியவந்தது. இது எனக்கும், என் குடும்பத்துக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் உறவினர்கள், நண்பர்கள் என்னை சந்தேக கண்ணுடன் பார்க்க தொடங்கினர். பலர் எனக்கு போன் செய்து திட்டவும் செய்தனர். இதனால் நானும், எனது பெற்றோரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளானோம். இதுகுறித்து கேரள முதல்வர், டிஜிபி, சைபர் கிரைம் போலீசார் உட்பட பலரிடம் புகார் கூறியும் எந்தவித பலனும் இல்லை.
அந்த வீடியோக்களை நீக்க இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த பலாத்கார காட்சிகள் இயக்குநர், எடிட்டர் மற்றும் தயாரிப்பாளரிடம் மட்டுமே இருந்தன. அப்படியிருக்க அவை எப்படி ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன என்பது தெரியவில்லை. இதனால் மனம் உடைந்த நான் பலமுறை தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். படத்தின் கதைப்படி காதல் சந்தியா தான் தற்கொலை செய்து கொள்வார். ஆனால் உண்மை வாழ்க்கையில் நான் தான் தற்கொலை முடிவுக்கு சென்றுள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.