போனில் மட்டும் பேசு : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு டார்ச்சர் கொடுத்த இயக்குநர் | எதிர்நீச்சல் தொடரில் 10 ஆண்டுகள் கூட நடிப்பேன் : மதுமிதா மகிழ்ச்சி | தீபிகா படுகோனின் ஜிம் மேட்டாக மாறிய ஐஸ்வர்யா மேனன் | 17 வருடங்களுக்கு பிறகு 2ம் பாகத்திற்காக இணைந்த சுரேஷ் கோபி - ஜெயராஜ் | மறுபிறவி ரகசியம் உடைக்கும் 'ஆன்மீக அழைப்பு' | தமிழில் வெளியாகும் ஹாலிவுட் பேய் படம் | மைதான் : அறியப்படாத இந்திய கால்பந்து அணியின் கதை | பிரியங்கா சோப்ராவை துரத்தியது கரண் ஜோஹர்தான்: கங்கனா குற்றச்சாட்டு | வெப் தொடரில் நடிக்கும் பிக்பாஸ் மணிகண்ட ராஜேஷ் | அரசியலுக்கு வரமாட்டேன் : விஜய் சேதுபதி பேட்டி |
தெலுங்குத் திரையுலகத்தில் பாகுபலி 2 படத்திற்குப் பிறகு பிரம்மாண்டத் தயாரிப்பாக வெளிவந்துள்ள படம் சைரா. சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா, சுதீப், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தை தெலுங்குத் திரையுலகப் பிரபலங்கள் பலர் பாராட்டி வருகிறார்கள். அதில் பாகுபலி இயக்குனர் ராஜ மவுலியின் பாராட்டு அதிகம் கவனிக்கப்பட்டுள்ளது.
பாகுபலி நாயகனாக பிரபாஸ் நடித்து வெளிவந்த பிரம்மாண்டப் படமான சாஹோ படம் பற்றி எந்தப் பாராட்டையும் தெரிவிக்காத ராஜமவுலி சைரா படத்தைப் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஸ்ரீ உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை அப்படியே சுவாசித்திருக்கிறார் சிரஞ்சீவி. இழந்த ஒரு வரலாற்றிற்கு அவர் மீண்டும் தீ மூட்டியிருக்கிறார். ஜெகபதிபாபு, சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா அனைத்து கதாபாத்திரங்களும் கதையுடன் மூழ்கி பின்னிப் பிணைந்துள்ளன. சரண், இயக்குனர் சுரேந்தர் ஆகியோருக்கு பிரமாதமான, தகுதியான வெற்றிக்கு வாழ்த்துகள்,” என்று பாராட்டியுள்ளார்.