பழம்பெரும் ஹிந்தி நடிகை சுலோச்சனா லட்கர் மறைவு : பிரதமர் இரங்கல் | தமிழ் சினிமாவில் மீண்டும் த்ரிஷா அலை | ஜுன் 9ம் தேதி போட்டியில் 'போர் தொழில், டக்கர்' | பானி பூரி: தமிழில் தயாராகும் புதிய வெப் தொடர் | சினிமா ஆகிறது முதல் போஸ்ட்மேன் கதை | பிம்பிளிக்கி பிலாப்பி: பிரான்ஸ் நாட்டின் லாட்டரி பின்னணியில் உருவாகும் படம் | 24 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கும் பாரதி கணேஷ் | 2018 படத்தில் முதலில் நடிக்க மறுத்தேன் : டொவினோ தாமஸ் | எனக்கு கேன்சர் என்று சொல்லவில்லை : சிரஞ்சீவி விளக்கம் | கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சுரேஷ்கோபியின் மகள் |
மலையாள திரையுலகில் இளைஞர்கள் அதிகம் விரும்பும்படியான படங்களை இயக்குவதில் கை தேர்ந்தவர் இளம் இயக்குனர் வினித் சீனிவாசன். ஆனால் ஒரு நடிகராகவும் அவரை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டதால் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த 3 வருடங்களுக்கு முன்பு நிவின்பாலியை வைத்து ஜேக்கப்பின்டே சொர்க்க ராஜ்யம் என்கிற படத்தை இயக்கிய வினீத் சீனிவாசன், அதன்பிறகு இந்த மூன்று வருடங்களில் சுமார் ஆறேழு படங்களில் நடித்துவிட்டார்.
இந்த நிலையில் பிரணவ் மோகன்லால் நடிக்கும் படத்தை இயக்குவதன் மூலம் மீண்டும் டைரக்சனுக்கு திரும்புகிறார் வினீத் சீனிவாசன். ஆதி என்கிற சூப்பர்ஹிட் படத்தின் மூலம் வெற்றிகரமாக அறிமுகமான பிரணவ், தனது இரண்டாவது படத்தில் சறுக்கினார்.. அதுமட்டுமல்ல அந்த இரண்டு படங்களுமே கொஞ்சம் சீரியசான படங்களாகவே அமைந்துவிட்டன.
இந்த நிலையில் இளைஞர்களிடம் மிக நெருக்கமாக செல்லும் வகையில் வினீத் சீனிவாசன் டைரக்சனில் நடிக்க இருக்கிறார் பிரணவ். இந்த படத்தை மோகன்லாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனமே தயாரிக்கிறது.