பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பேட்ட படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை நடிகர் பிருத்விராஜ் கைப்பற்றியுள்ளார். அவருடைய பிருத்விராஜ் புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன், சிபு தமீனின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை வெளியிடுகின்றன.
எப்படியாவது இந்தப்படத்தின் கேரள உரிமையை கைப்பற்றி விட வேண்டும் என நினைத்து கடந்த சில வாரங்களாகவே பிருத்விராஜ் காய்நகர்த்தி வந்தாராம். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன், தனது குடும்பத்துடன் விடுமுறைக்காக வெளிநாடு சென்றார் பிருத்விராஜ்.
இங்கே கிட்டத்தட்ட பேட்ட உரிமை கைமாறுவதில் தொகை குறித்து இழுபறி ஏற்பட்டதாம். இது வெளிநாட்டில் இருந்த பிருத்விராஜுக்கு தெரியவர, உடனடியாக தான் மட்டும் அங்கிருந்து சென்னை கிளம்பி வந்துவிட்டார். இந்த வியாபாரத்தை நல்லபடியாக முடித்துவிட்டு, அடுத்த பிளைட்டிலேயே மீண்டும் வெளிநாடு சென்றுவிட்டார் பிருத்விராஜ் விடுமுறை முடிந்து பேட்ட ரிலீசுக்கு சில நாட்கள் முன்பாக கேரளா திரும்புகிறாராம் பிருத்விராஜ்.