இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மலையாள சினிமாவின் இளம் முன்னணி நடிகரான துல்கர் சல்மான், கடந்த இரண்டு வருடங்களாகவே தனது திரையுலக பயணத்தில் சறுக்கலையே சந்தித்து வருகிறார். அவர் மலையாளத்தில் மட்டும் கவனம் செலுத்தி, நடித்து வந்த வரைக்கும் அவரது திரையுலக பயணம் சீராகவே இருந்தது. தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் காலூன்ற விரும்புவதால், அவரால் தொடர் வெற்றி படங்களை தர இயலவில்லை என்பதே உண்மை
இந்த வருடம் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான மகாநடி படம் கீர்த்தி சுரேஷிற்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத் தந்த அளவுக்கு, அதில் ஜெமினி கணேசன் வேடத்தில் நாயகனாக நடித்த துல்கர் சல்மானுக்கு பயன் தரவில்லை என்பதே உண்மை.. அதேபோல இந்த வருடம் இந்தியில் அவர் முதன்முதலாக நடித்த கர்வான் என்கிற படமும் அவருக்கு வரவேற்பை தரவில்லை.
தவிர தமிழில் அவர் நடித்து வரும் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் தயாராகியும் பல நாட்களாக முடங்கியே கிடக்கிறது. இதுபோக மலையாளத்தில் ஒரு யமண்டன் பிரேமகதா மற்றும் இந்தியில் சோயா பேக்டர்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் துல்கர் சல்மான். ஆகையால் வரும் 2019 துல்கருக்கு ஏற்றம் தரும் ஆண்டாக இருக்குமென நம்புவோம்.