'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கேரள சினிமாவின் பாக்யராஜ் என்று பாராட்டப்பட்ட இயக்குனர் பாலச்சந்திர மேனன். அந்த அளவுக்கு குடும்பத்தை மையமாக வைத்து படங்களை இயக்குபவர் என பெயர் பெற்றவர். கதையமைப்பில் மட்டுமல்ல, கதாநாயகிகளை அறிமுகப்படுத்தியதிலும் பாக்யராஜ் மாதிரி தான் இவரும். ஷோபனா, நாயகன் படத்தில் கமலின் மகளாக நடித்த கார்த்திகா, நடிகர் ஜெயராமின் மனைவி பார்வதி, இயக்குனர் ஷாஜி கைலாஷின் மனைவி ஆனி ஆகியோர் பாலசந்திர மேனனால் அறிமுகம் செய்யப்பட்டு திரையுலகில் ஜொலித்தவர்கள் தான்
கடந்த 4௦ வருடங்களுக்கும் மேலாக மலையாள திரையுலகில் ஒரு தனி இடம் பிடித்துள்ள இவர், சமீபத்தில் ஆல் இந்தியா பார் கவுன்சில் தேர்வை எழுதியுள்ளார். வக்கீலாக நீதிமன்றம் சென்று வாதாட வேண்டும் என்பது இவரது நீண்டநாள் கனவாகும்.
கடந்த 2௦11லேயே பட்டம் பெற்றுவிட்ட இவர், வக்கிலாக வேண்டும் என்பதற்காகவே இந்த பார் கவுன்சில் தேர்வை எழுதியுள்ளாராம். சினிமா கைவிட்டுவிட்டாலும் வக்கீலாக பிழைப்பை நடத்தாலமே என்கிறார் பாலசந்திர மேனன்.