ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
துல்கர் சல்மான் கதாநாயகனாக அறிமுகமான செகண்ட் ஷோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை கௌதமி நாயர். இந்த படத்தை தொடர்ந்து பஹத் பாசிலுடன் 'டைமண்ட் நெக்லஸ்' உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்தார். கௌதமி நாயர் தனது முதல் பட இயக்குனரான ஸ்ரீநாத் ராஜேந்திரனுடன் காதல் வசப்பட்டு, கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு குட்பை சொன்னார்
ஆனால், மீண்டும் மலையாளத்தில் இயக்குனராக திரும்பி வந்துள்ளார் கௌதமி நாயர். இவர் இயக்கவுள்ள முதல் படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் சன்னி வெய்ன் நடிக்கிறார். இவரும், கௌதமி நாயர், துல்கர் சல்மானுடன் சேர்ந்து அதே படத்தில் அறிமுகமானவர் தான். அந்த நட்பின் அடிப்படையில் சன்னி வெய்னை தனது முதல் படத்தில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்துள்ளார். கதாநாயகியாக பிருத்விராஜின் 'விமானம்' பட புகழ் துர்கா கிருஷ்ணா நடிக்கிறார்.