ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் இப்போது பூதாகரமாக தலையெடுத்துள்ளது படங்களின் ரிலீஸ் பிரச்சனை. தயாரிப்பாளர் சங்கத்தின் ஒப்புதல் இல்லாமலேயே முன்னணி நடிகர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது படங்களுக்கு ரிலீஸ் தேதியை அறிவித்து வருகின்றன. இப்போது மலையாள சினிமாவும் கிட்டத்தட்ட இதேபோல தியேட்டர் சிக்கலை சந்தித்து வருகிறது.
இதனால் அங்குள்ள தயாரிப்பாளர் சங்கமும் திரையரங்கு உரிமையாளர்களும் ஒன்றாக கலந்துபேசி இனிமேல் எந்த ஒரு படத்திற்கும் 2௦௦ படங்களுக்கு மேல் தியேட்டர்கள் தருவதில்லை என முடிவெடுத்துள்ளார்களாம். அந்தவகையில் வரும் டிச-14ஆம் தேதி வெளியாகும் மோகன்லாலின் 'ஒடியன்' படம் மட்டுமே அதிக எண்ணிக்கையில் ரிலீஸாகும் படமாக இருக்கும். அதன்பின் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருமாம்.