பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலாஜி மோகன் டைரக்சனில் மாரி படத்தின் இரண்டாம் பாகமாக மாரி-2 உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் கதாநாயகியும் வில்லனும் மாறியிருக்கிறார்கள். கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். தமிழில் அவரது முதல் படமான 'தியா'வில் அழுது வழியும் முகத்துடன் நடித்தவர், இந்தப்படத்தில் துறுதுறு குறும்பு பெண்ணாக, ஆட்டோ ட்ரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப்படத்தில் ரவுடியான தனுஷை அவர் விரட்டி விரட்டி காதலிக்கிறார் என்பது டிரைலரை பார்க்கும்போதே தெரிகிறது. இதேபோன்ற ஒரு கேரக்டரில் தான் பத்து ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் வெளியான 'சோட்டா மும்பை' படத்தில் நடிகை பாவனாவும் ஏற்று நடித்திருந்தார்.
அதில் ஆட்டோ டிரைவராக வரும் பாவனா அந்த ஏரியா தாதாவான மோகன்லாலை காதலிப்பதாகத்தான் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. பாவனாவும் சாய்பல்லவியும் அணிந்துள்ள கூலிங்கிளாஸ் வரை அதை உறுதி செய்வதாகத் தான் இருக்கின்றன. அந்தவகையில் சாய் பல்லவியின் கேரக்டர் பாவனாவை நினைவூட்டுவதாகவே அமைந்திருக்கிறது.