ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் சுசீந்திரன் இயக்கும் ஏஞ்சல், இருவர் உள்ளம் படங்களில் நடித்து வருகிறவர் பாயல் ராஜ்பரத். இவர் பஞ்சாபி நடிகை, தெலுங்கில் ஆர்எக்ஸ் 100 என்ற படத்தில் நடித்துள்ளார். பல பஞ்சாபி படங்களில் நடித்துள்ளார். தன்னை இயக்குனர் ஒருவர் பாலியல் உறவுக்கு அழைத்ததாக பாயல் பகீர் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
நான் நடித்த தெலுங்கு படம் ஆர்எக்ஸ் 100 வெற்றிபெற்றதால் தெலுங்கில் நிறைய வாய்ப்புகள் வந்தது. சமீபத்தில் ஒரு இயக்குனர் என்னிடம் கால்ஷீட் கேட்டார். என்னிடம் கதை சொல்லுங்கள் பிடித்திருந்தால் கால்ஷீட் தருகிறேன் என்றேன். அவர் என் வீட்டுக்கு வந்திருந்தார். என்னிடம் கதை சொன்னார். கடைசியாக "இந்தப் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றால் சிலரை அவர்களுக்கு பிடித்த மாதிரி திருப்திப் படுத்த வேண்டும்" என்றார். என்னை படுக்கைக்கு அழைக்கிறீர்களா? என்று அவரிடம் சத்தம்போட்டு வீட்டை விட்டு துரத்தினேன்.
நடிகை என்றால் எந்த தயக்கமும் இன்றி படுக்கைக்கு அழைக்கலாம் என்று நினைக்கிறார்கள். நான் நடிகைதான் ஆனால் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவள். திரையுலகில் நடிகைகளை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் பார்வை மாற வேண்டும். இவ்வாறு பாயல் கூறியுள்ளார்.