பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் திலீப். கடத்தல் வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஒன்று ஜெர்மனியில் வருகிற டிசம்பர் 15ந் தேதி முதல் 30ந் தேதி வரை நடக்கிறது. அதற்கு வெளிநாடு செல்ல வசதியாக தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க போலீசுக்கு உத்தர விடவேண்டும் என்று திலீப் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். "வழக்கை தாமதம் செய்யும் நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு செல்வது சாட்சிகளை கலைப்பதற்காக இருக்கலாம்" என்றார்.
இதற்கு திலீப்பின் வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுவரை கோர்ட் விதித்த எந்த நிபந்தனையையும் திலீப் மீறவில்லை. போலீஸ் விசாரணைக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். சமூகத்தில் பொறுப்புள்ள குடிமகன் அவர். கோடி கணக்கில் அரசுக்கு வருமானவரி செலுத்துகிறார்" என்று வாதிட்டார்.