அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மலையாள இயக்குனரும் கதாசிரியருமான எம்.டி.வாசுதேவன் நாயர் மகாபாரதத்தை தழுவி எழுதிய 'ரண்டமூழம்' என்கிற நாவலை மையமாக வைத்து மோகன்லால் நடிப்பில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் மகாபாரத கதையை படமாக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தற்போது 'மோகன்லாலை வைத்து ஒடியன்' படத்தை இயக்கி வரும் ஸ்ரீகுமார் மேனன் தான் இந்தப்படத்தை இயக்கவுள்ளார். துபாயில் இருக்கும் தொழிலதிபர் பி.ஆர்.ஷெட்டி தான் இந்தப்படத்தை தயாரிக்கவுள்ளார்.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்தப்படத்திற்காக தான் போட்டிருந்த ஒப்பந்த காலம் முடிந்துவிட்டதாகவும், இந்த குறிப்பிட்ட காலத்தில் இந்த கதையை படமாக்க தவறியதால் படத்தின் ரைட்ஸை தன்னிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என எம்.டி.வாசுதேவன் நாயர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணை வரும் நவ-7ல் நடைபெற இருக்கிறது.
இந்த பிரச்சனையை எம்.டி.வாசுதேவன் நாயருடன் கலந்துபேசி சரி செய்ய முயன்றார் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன். ஆனால், எம்.டி.வாசுதேவன் நாயர் இந்த விஷயத்தில் தொடர்ந்து பிடிவாதமாக இருக்கிறார்.
இந்தநிலையில் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் பி.ஆர்.ஷெட்டி, “இந்த கதை விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுவிட்ட பின்னர் எம்.டி.வாசுதேவன் நாயர் கதையை நான் படமாக தயாரிக்க விரும்பவில்லை. மகாபாரதம் கதையை நான் தயாரிப்பது பணத்திற்காக அல்ல. அதை உலகம் முழுதும் உள்ள மக்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்காகத்தான். நிச்சயம் வேறு ஒருவர் கதையில் அந்தப்படம் தயாராகும்.” என கூறியுள்ளார்