தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த ஆண்டு நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய மலையாள நடிகர் திலீப்பை நடிகர் சங்கத்தை விட்டு நீக்கினார்கள். ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சங்கத்தின் புதிய தலைவராக மோகன்லால் பொறுப்பேற்றதும் முதல் வேலையாக திலீப்பை நீக்கியது செல்லாது என அறிவித்து மீண்டும் அவரை சங்கத்திலேயே தொடர வைத்தார். இதனால் சம்பந்தப்பட்ட நடிகையின் ஆதரவாளர்களின் கோபத்துக்கும் ஆளானார்.
இந்தநிலையில் பிரச்சனை பெரிதாக வேண்டாம் என தற்போது திலீப்பே சங்கத்தில் இருந்து விலகுவதாக ராஜினமா கடிதம் கொடுத்துள்ளார். இப்போது என்ன பிரச்சனை என்றால், திலீப்பின் ராஜினமா குறித்து பேசும்போது, திலீப்பை தனது வீட்டுக்கு வரவழைத்து தானே ராஜினமா செய்ய சொன்னதாகவும் அதை ஒப்புக்கொண்டு திலீப் ராஜினமா கடிதம் கொடுத்ததாகவும் மோகன்லால் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
ஆனால் அதற்கு மறுநாளே திலீப் அனுப்பிய அறிக்கையில் என்னை யாரும் ராஜினமா பண்ண சொல்லவில்லை.. நானே தான் முன்வந்து விலகினேன் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். தற்போது நடிகர் சங்க செயலாளர்களில் ஒருவரான ஜெகதீஷ் இதுபற்றி கூறும்போது, மோகன்லால் சொல்வது தான் உண்மை என கூறியுள்ளார்.
யார் கூறுவது உண்மை என்கிற பிரச்சனையில் மோகன்லாலுக்கும், திலீப்புக்கும் தேவையில்லாத சங்கடம் உருவாகிவிட்டதாகவே மலையாள திரையுலகில் பேசிக்கொள்கின்றனர்.