இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சமீபகாலமாக திரையுலகை சேர்ந்த நடிகைகள் மற்றும் பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களுக்கு நடந்த பாலியல் டார்ச்சர்கள் குறித்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் டெஸ் ஜோசப் என்கிற பெண் இயக்குனர், மலையாள நடிகரான முகேஷ் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டை டுவிட்டரில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சில வருடங்களுக்கு முன் நடிகர் முகேஷ் சேனல் ஒன்றில் கோடீஸ்வரன் என்கிற நிகழ்ச்சியை நடத்தி வந்தபோது, அதில் பணிபுரிந்த தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதில் குறிப்பிட்டுள்ளார் டெஸ் ஜோசப்.
இந்த குற்றச்சாட்டு குறித்து முகேஷின் மனைவி மெத்தில் தேவிகா கூறும்போது, “என் கணவரிடம் இதுகுறித்து விசாரித்தேன்.. ஆனால் அவரோ அப்படி நிகழ்வு நடந்ததாகவே தனக்கு நினைவு இல்லை என கூறினார். வழக்கமாக அவர் என்னிடம் பொய் எதுவும் சொல்வதில்லை” என கூறியுள்ளார்.
பொதுவாக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வரும்போது, தான் அப்படி நடந்து கொள்ளவே இல்லை என்று தான் கணவன்மார்கள் மனைவியிடம் சொல்வார்கள்.. இதில் நடிகர் முகேஷ் மட்டும் சற்றே வித்தியாசமாக அப்படி நிகழ்வு நடந்ததாகவே தனக்கு நினைவு இல்லை என கூறி புதுவிதமாக மனைவியை சமாளித்துள்ளார்.