தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முன்னணி திரைப்பட இயக்குனர்கள், நடிகர்கள் மீது பெண்கள் பாலியல் புகார் கூறி வருவது அதிகரித்துள்ளது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள மீ டூ ஆப்பில் பெண்கள் புகார்களை பதிவு செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் பிரபல மலையாள நடிகரும், பார்லிமென்ட் உறுப்பினருமான முகேஷ் மீது மும்பையைச் சேர்ந்த இயக்குனர் டெஸ் ஜோசப் என்பவர் பாலியல் புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
19 ஆண்டுகளுக்கு முன்பு மலையாள சேனல் ஒன்றில் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நான் இயக்கினேன். அந்த நிகழ்ச்சியை முகேஷ் தொகுத்து வழங்கினார். அப்போது அவர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இரண்டு முறை என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தவறாக பேசினார். ஓட்டலில் தனது அறைக்கு பக்கத்திலேயே எனக்கு அறை ஒதுக்கினார். இதுகுறித்து எனது பாஸ் டிரெக் ஓபிரையினரிடம் தெரிவித்தேன். அவர் நிலமையை புரிந்து கொண்டு திருவனந்தபுரத்திலிருந்து மும்பை திரும்ப ஏற்பாடு செய்து கொடுத்தார். என்னை அன்று காப்பாற்றிய எனது பாசுக்கு நன்றி என்று எழுதியுள்ளார்.
இதுகுறித்து முகேஷ் கூறும்போது, 20 ஆண்டுகளுக்க முன்பு நடந்தது எனக்கு நினைவில்லை. டெஸ் ஜோசப் யாரென்றே எனக்குத் தெரியாது. என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள் என்றார். முகேஷ், நடிகை சரிதாவின் முன்னாள் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.