ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்த வாரம் மலையாளத்தில் 'லில்லி' என்கிற ஹாரர் த்ரில்லர் படம் வெளியானது. இதில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இவர் தான் சமீபத்தில் ஹிட்டாகி ஓடிக்கொண்டிருக்கும் 'தீவண்டி' படத்திலும் கதாநாயகி. ஆனால் இந்த இரண்டு படங்களுக்கும் நடிப்பில் மிகப்பெரிய வித்தியாசம் காட்டி நடித்துள்ளார்.
லில்லி படத்தில் நிறைமாத கர்ப்பிணியாக நடித்துள்ளார் சம்யுக்தா மேனன். இதற்காக சில நாட்கள் மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டுக்கு சென்று கர்ப்பிணிகளின் நடவடிக்கைகளை கவனித்து அதை உள்வாங்கி நடித்தாராம். அதுமட்டுமல்ல, படத்தில் ரத்தம் படிந்த, சேறான, கிழிந்த நிலையிலான ஆடையுடனேயே 21 நாட்கள் தொடர்ந்து நடித்தாராம் சம்யுக்தா மேனன்.
இந்தப்படத்தில் கர்ப்பிணியாக, ஹாரர் கேரக்டரில் நடித்திருந்த இவரால் படப்பிடிப்பு முடிந்தபின்னும் அதன் பாதிப்பிலிருந்து அவ்வளவு சுலபமாக வெளியேவர முடியவில்லையாம். இதற்காக இவருக்கு சில நாட்கள் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு படிப்படியாகத்தான் அந்த கேரக்டரின் தாக்கத்தில் இருந்து வெளியே வர முடிந்தது என அவரே தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.