ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். தமிழில் ஒரு பக்க கதை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படம் இதுவரை வெளிவரவில்லை. அதற்கு பிறகு அவர் நடித்து வெளிவந்த மீன் குழம்பும் மண்பானையும் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் சொந்த மொழியான மலையாளத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது 5 மலையாளப் படங்களில் நடித்து வரும் அவர் அடுத்து சந்தோஷன் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து சந்தோஷ் சிவன் கூறியிருப்பதாவது: மணிரத்தினத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தை முடித்து கொடுத்து விட்டேன். அடுத்து மலையாளத்தில் படம் இயக்குகிறேன். இது ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் படம். இந்தியாவின் முன்னணி டெக்னீஷியன்கள் இதில் பணியாற்ற இருக்கிறார்கள். காளிதாஸ், மஞ்சுவாரியார் நடிக்கிறார்கள். இவர்களுடன் இயக்குனர் ஷோபின் ஷாகிர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அக்டோபர் 20ந் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. என்றார்.