டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாளத்தில் குணச்சித்திர நடிகராக அறியப்பட்டாலும் தனது சமூக நோக்கிலான கதைகளால் தான் கதை எழுதும் படங்களின் மீது எதிர்பார்ப்பை தூண்டுபவர் நடிகரும், இயக்குனருமான ஜாய் மேத்யூ. இவரது கதையின் நாயகர்கள் எல்லோருமே நடுத்தர வயதை தாண்டிய மனிதர்கள் தான்.
அந்தவகையில் ஷட்டர் படத்தில், விலைமாது மீது மோகம் கொண்டு திடீரென எல்லைக்கோட்டை தாண்ட முயலும் ஒரு குடும்பத்தலைவன் மனநிலையையும், சிக்கலையும் சொல்லியிருந்தார். மம்முட்டி நடித்த அங்கிள் படத்தில் பெண்கள் விஷயத்தில் ஜெகஜால கில்லாடியான ஒருவருடன் அவரது நண்பரின் டீனேஜ் மகள் ஒருநாள் முழுதும் தனியாக இருக்க நேரிட்டால் எப்படி இருக்கும் என்கிற கான்செப்ட்டை திக்திக் நடையில் சொல்லியிருந்தார்.
அங்கிள் படத்திற்கு விமர்சன ரீதியாகவும், ஓரளவு வசூல் ரீதியாகவும் கிடைத்த வரவேற்பு, இந்தப்படத்தின் கூட்டணியை அடுத்த படத்திலும் தொடர வைத்துள்ளது. ஆம், அங்கிள் பட இயக்குனர் கிரீஸ் தாமோதர் டைரக்சனில் மம்முட்டி மீண்டும் நடிக்கும் படத்திற்கு இதேபோல நடுத்தர வயது மனிதன் ஒருவரின் கதையை எழுதி வருகிறாராம் ஜாய் மேத்யூ.