தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திலீப் நடிப்பில் கடந்த வருடம் வெற்றி பெற்ற ராம்லீலா படத்தை இயக்கியவர் அருண்கோபி. இந்தப்படம் ரிலீஸாவதற்கு முன்பு தான் திலீப், நடிகை கடத்தல் வழக்கில் கைதாகி சிறை சென்றார். அவர் சிறையிலிருந்த சமயத்திலேயே இந்தப்படம் வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த அருண்கோபி சமீபத்தில் சினிமா பெண்கள் நல அமைப்பை சேர்ந்த நடிகைகளையும், கேரள அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது, "யாரோ ஒரு கிரிமினலின் வாக்குமூலத்தை வைத்துக் கொண்டு ஒருவரை (திலீப்பை) கைது செய்ய அவ்வளவு ஆர்வம் காட்டிய கேரள அரசும், சினிமா பெண்கள் நல அமைப்பும் (WCC) இப்போது அமைதியாக இருப்பது ஏன்? அவளுக்காக நிற்பதற்கு இங்கு யாருக்கும் விருப்பமும் இல்லை" என விளாசியுள்ளார்.
கடந்த வருடம் கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான மலையாள நடிகைக்காக அவளுக்கொப்பம் (அவளுக்காக ) என்கிற பிரச்சாரத்தை அப்போது முன்னெடுத்த ரம்யா நம்பீசன், பார்வதி, ரீமா கல்லிங்கல் போன்ற நடிகைகள் சினிமா பெண்கள் நல அமைப்பையும் உருவாக்கினார்கள்.. அதைத்தான் கடுமையாக விமர்சித்துள்ளார் இயக்குனர் அருண்கோபி.