சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் |
கடந்த சில மாதங்களுக்கு முன் கேரளாவையே அச்சுறுத்தியது நிபா வைரஸ். இந்த வைரஸ் பாதிப்பினால் கேரளாவில் சிலர் உயிரிழந்தனர். குறிப்பாக நர்ஸ் உமா என்பவர் மரணத்தை தழுவியது, மாநிலம் தாண்டி உலகம் முழுவதிலும் மிகப்பெரிய அதிர்ச்சியையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியது..
இந்தநிகழ்வுகளின் அடிப்படையில் ஒரு படம் எடுக்க இருப்பதாக கூறிவந்த பிரபல மலையாள இயக்குனர் ஜெயராஜ், அதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார். ஆனால் நேற்று இயக்குனர் ஆஷிக் அபு, இதே நிகழ்வுகளை வைத்து வைரஸ் என்கிற படத்தை இயக்கவுள்ளதாக, போஸ்டரை வெளியிட்டு நடிகர்களையும் அறிவித்தார்.
இதனால் இயக்குனர் ஜெயராஜ் அதிர்ச்சியடைந்தாலும், இந்த அறிவிப்பு வெளியான கொஞ்ச நேரத்திலேயே தான் இயக்கவுள்ள படத்தை கைவிடுவதாக மிகவும் பெருந்தன்மையுடன் அறிவித்துள்ளார். ஒரே கதையை இரண்டு பேர் எடுக்கும் போட்டி மனப்பான்மையால் இருதரப்பும் நஷ்டப்படுவதை தவிர்க்கும் விதமாகவே தான் தனது முயற்சியை கைவிட்டதாக கூறியுள்ளார் ஜெயராஜ்.