துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
கேரளாவை மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கியது சமீபத்தில் பெய்த மழையும் அதனை தொடர்ந்த பெரு வெள்ளமும். ஒருபக்கம் பொதுமக்கள் நிவாரண நிதி அளிக்க, இன்னொரு பக்கம் மொழி பேதம் பாராமல் திரையுலக பிரபலங்கள் பலரும் நிவாரண நிதி வழங்கினார்கள்.
இதில் தமிழகத்தில் இருந்து லாரன்ஸ் ஒரு கோடி வழங்கிய நிலையில் தெலுங்கில் இருந்து பிரபாஸ் ஒரு கோடி நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். ஆனால் மலையாள திரையுலகை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் குறைவான லட்சங்களில் மட்டுமே நிதி வழங்கியுள்ளனர்.
நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கேரளா செய்தி தொடர்புத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இதை குறிப்பிட்டு, "நம் ஊரில் நான்கு கோடி சம்பளம் வாங்குபவர்களுக்கு கூட சொந்த ஊருக்கு செய்வதற்கு மனம் வரவில்லை. ஆனால் நடிகர் பிரபாஸ் ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார். இங்குள்ள நடிகர்கள் இந்த விஷயத்தில் அவரை ரோல் மாடலாக எடுத்துக்கொள்ளுங்கள்" என மலையாள நடிகர்களை குறைசொல்லி பேசினார். இது திரையுலகினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.