வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கடந்த மூன்று வருடங்களுக்கு முன் மலையாளத்தில் நிவின்பாலி நடித்த ஒரு வடக்கன் செல்பி படம் வெளியானது. நூறு நாட்கள் ஓடிய இந்த படத்தை ப்ரஜித் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் தான் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் நூறு நாட்கள் ஓடியிருந்தாலும், இந்த மூன்று வருடங்களில் ப்ரஜித் எந்த படமும் இயக்காமல் இருந்தது பலருக்கும் ஆச்சரியம் அளித்தது.
இந்த நிலையில் தனது இரண்டாவது பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ப்ரஜித். இந்த படத்தில் பிஜூமேனன் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் தொண்டிமுதலும் திரிக்சாட்சி படத்திற்காக தேசிய விருது பெற்ற கதாசிரியர் ஷாஜி பழூர் என்பவர் தான் இந்த படத்திற்கு கதை திரைக்கதை எழுதுகிறார். ஒரு வடக்கன் செல்ஃபி படத்தை போலவே இதுவும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட உள்ளதாம்.