பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த வித்தியாசமான கதையம்சம் கொண்ட கம்மட்டிப்பாடம் படத்தில் கவனித்தக்க அறிமுகமாக உள்ளே நுழைந்தவர் தான் நடிகர் மணிகண்ட ஆச்சாரி.. கேரளாவில் வெள்ளம் சூழ்ந்திருந்த நேரத்தில் இவரும் நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், தன்னால் முழு பங்களிப்பை தர முடியவில்லையே என வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தாராம் மணிகண்ட ஆச்சாரி.
கேரளாவை கடந்த பதினைந்து நாட்களாக வாட்டி எடுத்த மழையும், அதையடுத்து ஏற்பட்ட வெள்ளமும் குறைய தொடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்களுடன் நிவாரண குழுவினரும் இணைந்துள்ளனர்
அப்படி துப்புரவு பணிகளுக்காக வெவ்வேறு பகுதியில் இருந்து வந்திருப்பவர்கள் ஓரிடத்தில் தங்குவதற்கு வசதியாக தனது வீட்டை கொடுத்ததுடன், இந்த பணிகளுக்காக ஆங்காங்கே போய்வர தனது காரையும் பயன்படுத்திக்கொள்ள கொடுத்துவிட்டாராம் மணிகண்ட ஆச்சாரி.