'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கேரளாவை மழையும், பெரு வெள்ளமும் புரட்டிப்போட்டன. பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கியது போல திரையுலகினரின் வேலைகளும் முடங்கின. தங்களது படப்பிடிப்புகளை நடத்த முடியாமல், படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் தடுமாறிய திரையுலகினர் முதற்கட்டமாக தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் அடுத்ததாக நிவாரண பணிகளில் ஈடுபட்டும் வந்தனர்.
இந்தநிலையில் கேரளாவில் ஓரளவு இயல்புநிலை திரும்ப ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து சில படங்களின் படப்பிடிப்புகள் துவங்கியுள்ளன. அதில் மோகன்லால் நடிப்பில் லூசிபர் படத்தை இயக்கி வரும் பிருத்விராஜ், கடந்த சில தினங்களாகவே விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார். அதேபோல குஞ்சாக்கோபோபன், அபர்ணா பாலமுரளி நடிக்கும் அல்லு ராமேந்திரன் படத்தின் படப்பிடிப்பும் துவங்கியுள்ளது.