தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கேரள அரசு திரைப்பட விருது வழங்கும் விழா திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மோகன்லால் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் மோகன்லால் கலந்துகொண்டால் விழாவை புறக்கணிப்போம் என விருது பெற்ற சிலர் போர்க்கொடி தூக்கி கடந்த இரண்டு வாரங்கள் முழுதும் மலையாள திரையுலகை பரபரப்பிலேயே வைத்திருந்தனர்.
இந்தநிலையில் விழாவில் கலந்துகொண்ட மோகன்லால், "நான் இங்கே சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவில்லை. கடந்த 40 வருடங்களாக உங்களுடனே தான் பயணித்திருக்கிறேன்.. அதனால் மற்றவர்கள் விருது பெறுவதில் எனக்கு எந்தவித பொறாமையும் இல்லை.. உங்களில் ஒருத்தனாக, நீங்கள் விருது வாங்குவது கண்டு பெருமைப்படும் சக கலைஞனாகவே இங்கு வந்துள்ளேன்" என தன் மீது எழுந்த எதிர்ப்புகளுக்கு நெகிழ்ச்சியான முறையில் பதில் கூறினார்.