ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள நடிகர் சங்கத்தில் சமீபத்தில் தலைவராக பொறுப்பேற்றார் மோகன்லால். அதையடுத்து நடிகை வழக்கில் சிக்கி கைதான நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்க்கும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில நடிகைகள் சங்கத்தில் இருந்து விலகினார்கள்..
சினிமா பெண்கள் நல அமைப்பை சேர்ந்த பார்வதி, ரேவதி, பத்மப்ரியா உள்ளிட்டவர்கள் திலீப் விஷயத்தில் நடிகர் சங்கம் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், இதுகுறித்து தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
நடிகர் சங்கமும் அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்தது. அதன்படி இன்று நடிகர் சங்கத்திற்கு வருகை தந்த பார்வதி, ரேவதி, பத்மப்ரியா உள்ளிட்ட மூவர் குழுவுடன் தலைவர் மோகன்லால் பேசசுவார்த்தை நடத்தினார்.
இரண்டு மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் பெண்கள் நல அமைப்பினர் வைக்கும் கோரிக்கைகள் குறித்து பொதுக்குழுவை கூட்டி முடிவெடுக்கப்படும் என மோகன்லால் உறுதியளித்துள்ளார். அதேபோல நடிகர்சங்கத்துடன் இணைந்து செயல்படவே பெண்கள் நல அமைப்பு விரும்புவதாக நடிகை ரேவதியும் கூறியுள்ளார்.