மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
மலையாள சினிமாவில் குறிப்பிடத்தக்க கதாநாயகியாக வளர்ந்து வருபவர் அனு சித்தாரா. தற்போது மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள ஒரு குட்டநாடன் பிளாக் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார் அனு சித்தாரா.
சமீபத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அனு சித்தாரா, இந்தப்படத்தில் தனக்கு வாய்ப்பு எப்படி கிடைத்தது என்கிற சுவாரஸ்யமான விஷயத்தை மேடையில் பகிர்ந்துகொண்டார்.
அதாவது மம்முட்டியை வைத்து ஒரு குட்டநாடன் பிளாக் என்கிற படத்தை கதாசிரியராக சேது இயக்குகிறார் என செய்தி வெளியானபோது, அதையடுத்து இந்தப்படத்தில் அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார் என இணையதளம், யூ டியூப் ஆகியவற்றில் ஒரு வதந்தி பரவ ஆரம்பித்ததாம்.
ஆனால் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். திடீரென ஒரு நாள் அதுவும் அனு சித்தாராவின் பிறந்தநாளன்று, அவரிடம் போனில் பேசிய மம்முட்டி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னதோடு, இந்தப்படத்தில் அவர் கதாநாயகியாக நடிக்கிறார் என்பதையும் உறுதிப்படுத்தினாராம்.