ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமா நட்சத்திரங்கள் நகைக்கடை, துணிக்கடை திறப்பு விழாக்களில் கலந்துகொள்வதும் அதற்கு பெருங்கூட்டம் கூடுவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் சில நேரங்களில் அதுவே சோகத்தில் முடிந்துவிடும் அபாயமும் உண்டு. நடிகர் துல்கர் சல்மான் நேற்று கேரளாவில் கொட்டராக்கராவில் புதிய மால் ஒன்றை திறந்துவைக்க வந்தபோதும் கூட்ட நெரிசலில் சிக்கி இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேமம் என்கிற பகுதியை சேர்ந்த ஹரிலால் என்கிற அந்த இளைஞர் துல்கர் சல்மானை பார்க்க வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. விரைந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத காரணத்தால் அவரது உயிர் வழியிலேயே பிரிந்ததாக சொல்லப்படுகிறது.
முன்னாள் டிஜிபி ஜேக்கப் பொன்னூஸ் என்பவர் நட்சத்திரங்கள் இதுகுறித்த விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என துல்கரின் பெயரை குறிப்பிடாமல் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.