பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த வருடம் கேரளாவில் நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளானதை தொடர்ந்து, திரையுலகில் உள்ள பல்வேறு அமைப்புகளில் உள்ள பெண்களையும் இணைத்து சினிமா பெண்கள் நல அமைப்பை (WCC) துவங்கினார்கள் சில நடிகைகள்.. இதில் மஞ்சு வாரியார், பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்தனர்.
அந்த நடிகை பிரச்சனையில் சிக்கி சிறை சென்றுவந்த நடிகர் திலீப்பை தற்போது நடிகர் சங்கத்தில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத்தில் குழப்பம் விளைவித்து வரும் வேலையையும் இந்த அமைப்பு செய்து வருகிறது.
ஆனால் நடிகை மம்தா மோகன்தாஸ் இந்த பெண்கள் நல அமைப்பில் சேரவில்லை.. இதுகுறித்து சமீபத்தில் கூறியுள்ள மம்தா, "பெண்கள் நல அமைப்பு என்கிற ஒன்று தேவை என நான் நினைக்கவில்லை. அதனால் நான் சேரவில்லை" என்று கூறியுள்ளார்.
மேலும் நடிகை கடத்தல் விவகாரத்தை பற்றி கேட்டபோது, "எந்த ஒரு பிரச்சனையும் சிலரை பொறுத்தவரை அவர்களாகவே உருவாக்கி கொள்வது தான்" என எந்த தயக்கமும் இன்றி பதில் கூறியுள்ளார் மம்தா மோகன்தாஸ்.